உலக வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு 30 வெண் பிரம்புகள் கையளிப்பு

உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தில் உள்ள விழிப்புலனற்றோருக்கான 30 வெண் பிரம்புகள் கையளிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் எற்பாட்டில் சமூக சேவகரான மொஹமட் அனீஸ் அவர்களால் தாய்நிலம் அறக்கட்டளை சுவிஸ் கிளையினரால்  கிளிநொச்சி பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வன்னி விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களிடம்  மேற்படி வெண் பிரம்புகள் கையளிக்கப்பட்டன.